தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில் உள்ள கண்டக்டர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்மை நகலை கேட்டு முழு கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நகலை மட்டும் பெற்றுக்கொண்டு கட்டண சலுகை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.