வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-02-16 13:58 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தாவுது மில் பகுதியில் இருந்து வடசேரி பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி