கோபி-அந்தியூர் இடையே இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் கோபியில் இருந்து இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் நலன்கருதி நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?