கடையநல்லூர் யூனியன் ஊர்மேலழகியான் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள், பயணிகள் நிழற்கூடம் கட்டப்படாததால் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.