ஏரியூர் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து சுமார் ஓராண்டு ஆகிறது. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழைய முடியாத வகையில் நுழைவுவாயிலில் இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்களை நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இதன் காரணமாக பஸ் நிலையத்தை தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பஸ் டிரைவர்களும், பயணிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்குமார், அச்சம்பட்டி.