விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அவ்வப்போது மூடப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் தினமும் ஊர்ந்து செல்கின்றன. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாத்தூர் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.