கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் சாலையின் இருபுறமும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள சுருங்கிப்போய் காணப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.