சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதிகளில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் சாலையின் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக குறுக்கீடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.