விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களை அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.