போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-09-29 17:54 GMT

நாமக்கல் நகரில் மோகனூர் சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை சாலையோரம் இருபுறமும் நிறுத்தி செல்கிறார்கள். இவ்வாறு இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால், அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-ராஜா, நாமக்கல்.

மேலும் செய்திகள்