கூடுதல் பஸ் வசதி

Update: 2024-09-15 18:02 GMT

திருச்செங்கோட்டை அருகே குருக்கலாம்பாளையம், அம்மாபாளையம், கோணங்கிபாளையம், ஜக்கமா தெரு ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மல்லசமுத்திரம் சென்று உயர்நிலை கல்வி படித்து வருகின்றனர். இவர்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள காளிபட்டி வரை நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டி உள்ளது. சில நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம், திருச்செங்கோடு.

மேலும் செய்திகள்