பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2024-09-15 17:01 GMT

உத்தமபாளையம் பஸ்நிலைய வளாகத்தை ஆக்கிரமித்து ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ்களையும் அதற்கான நடைமேடை அருகே நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்துக்குள் 2, 3 சக்கர வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்