பஸ் வசதி வேண்டும்

Update: 2024-09-01 14:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், கனக்கம்மாசத்திரம், பெரிய களக்காட்டுர் உள்பட அதனை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல திருவாலங்காடு ரெயில் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் இங்கு சரியான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்