மந்தமான நிழற்கூடம் அமைக்கும் பணி

Update: 2024-07-21 18:19 GMT

வெண்ணந்தூர் பேரூராட்சியின் மையப்பகுதியில் அண்ணா சிலை பஸ்நிறுத்தம் உள்ளது. ராசிபுரம், ஆட்டையாம்பட்டி, மல்லூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த வழியே செல்கின்றன. இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இருந்தும் இதுவரை பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இங்கு பஸ் நிறுத்தம் நிழற்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கட்டுமான பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி நிழற்கூட பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-பாரத், நாமக்கல்.

மேலும் செய்திகள்