கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

Update: 2024-07-14 18:01 GMT

ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் கனரக வாகனங்களில் இரும்பு கம்பிகள், தகரம், குழாய் உள்ளிட்ட பொருட்களை ஆபத்தான முறையில் சாலையில் உரசும் படி கொண்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் உரிய பாதுகாப்பு இன்றி சாலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-சுரேஷ், ஏரியூர்.

மேலும் செய்திகள்