பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கலாமே!

Update: 2024-07-14 17:58 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதில் மின்விசிறி, செல்போன் சார்ஜ் போட மின்சார வசதி, பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க இரும்பு நாற்காலிகள் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நிழற்கூடத்தில் ஒரு சில நாற்காலிகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதி அடைகின்றனர். இதனால் பயணிகள் படிக்கட்டுகளிலும், சேதமடைந்த நாற்காலியின் கம்பியிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே அதிகாரிகள் பயணிகளின் நிலை அறிந்து சேதமடைந்த நாற்காலிகளை சீரமைத்து தர வேண்டும்.

-சேகர், பாப்பாரப்பட்டி

மேலும் செய்திகள்