கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2024-07-07 17:55 GMT
கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் வழியாக கொட்டையூருக்கு பள்ளி, கல்லூரி நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் கொட்டையூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் வேறு வழியின்றி அதில் ஏறி செல்வதால் பெரும் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிலர் இடம் இல்லாமல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முள் மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்