பட்டுப்போன புளிய மரம்

Update: 2024-06-30 11:37 GMT

திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் புளிய மரங்கள் உள்ளன. இதில் ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு புளியமரம் பட்டுப்போன நிலையில் காய்ந்து காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்