வாகன ஓட்டிகளால் பயணிகள் அவதி

Update: 2024-06-23 17:42 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிகள் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் விரைந்து சென்று பஸ்களை பிடிக்க மிகவும் அவதியடைகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்குவதால் டிரைவர்கள், பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்துபவர்கள் மற்றும் வேகமாக இயக்குபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான், குப்தா நகர்.

மேலும் செய்திகள்