மேம்பாலம் அமைக்கலாமே!

Update: 2024-06-23 17:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகாவில் எமக்கல்நத்தம் கிராமத்தின் சுற்று வட்டார பகுதிகளான பாறையூர், சாலிநாயனப்பள்ளி, கோதியழகனூர், நேரலகோட்டை, கொல்லபள்ளி உட்பட பல கிராம புற பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பாம்பாற்றை கடந்து தான் தங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆற்றை கடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே பாம்பாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.

-குமார், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்