பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2024-06-09 17:48 GMT

பஸ்கள் நின்று செல்லுமா?

ராசிபுரம் டவுனில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இக்கோவில் வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து ராசிபுரம் நகருக்கு வரும் பஸ்களும், ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் பஸ்களும் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. எனவே அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் மாரியம்மன் கோவில் அருகே நின்று சென்றால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். எனவே, மாரியம்மன் கோவில் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்