போக்குவரத்து நெரிசல்

Update: 2024-05-19 13:55 GMT

உத்தமபாளையம் அருகே ஆனைமலையான்பட்டி சி.எஸ்.ஐ. சர்ச் தெரு, வடக்கு தெருவில் சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். தெருவிளக்குகள் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்