சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-05-12 14:11 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலிருந்து வடக்குத்தொண்டைமான் ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான் ஊரணி பிரிவு சாலை அருகே கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்தப் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து மேற்கூரையிலும், சுவற்றிலும் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நடமாட்டத்தின்போது இந்த பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதற்குபதில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்