போக்குவரத்து நெரிசல்

Update: 2024-05-05 18:17 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதி நகரின் மையப்பகுதி என்பதால் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பஸ்கள் என அனைத்து வாகனங்களும் இந்த பிரதான சாலை பகுதியை கடந்து செல்ல வேணடும். இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-சண்முகம், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்