சமூக விரோதிகளின் கூடாரமான பஸ் நிலையம்

Update: 2024-05-05 18:15 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாமல் உள்ளன. ஆனால் இந்த கடைகளின் சட்டர் பூட்டப்படாமல் திறந்தபடியே உள்ளன. எனவே சமூக விரோதிகள் கடைகளின் உள்ளே சென்று மது அருந்துவதும், சூதாடுவதும் மேலும் பிற சமூக விரோத செயல்களுக்கும் பஸ் நிலையத்தின் உள்ள கடைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கடைகளை திறக்க நடவடிக்கை உடுக்க வேண்டும்.

-செம்பி, ஏரியூர்.

மேலும் செய்திகள்