வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-05-05 17:38 GMT


 திருப்பூர் மாநகர பகுதியான பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் இருந்த வேகத்தடையை எடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக தற்போது வாகனங்கள் அந்த பகுதியில் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் பள்ளிக்கூடம் அருகே மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்