பயணிகள் அவதி

Update: 2024-05-05 17:20 GMT

கம்பம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் சில உத்தமபாளையம் ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்கிறது. இதனால் வெளியூர் செல்வதற்காக உத்தமபாளையம் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே வெளியூர் பஸ்கள், உத்தமபாளையம் வழியாக செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்