பயணிகள் அவதி

Update: 2024-04-28 15:45 GMT

 பெருந்துறையில் இருந்து ராஜன் நகர், சத்தியாபுரம், குஞ்சரமடை வழியாக கோபிக்கு 12.10 மணிக்கு பி5 என்ற பஸ் புறப்படுகிறது. அதன்பின்னர் 4.20 மணிக்குத்தான் பஸ் இயக்கப்படுகிறது. இடைப்பட்ட 4 மணி நேரம் பஸ் இல்லை. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பெருந்துறையில் இருந்து மதியம் 2 மணிக்கு கவுந்தப்பாடி செல்லும் பி 10ஏ என்ற பஸ்சை ராஜன் நகர், சத்தியாபுரம், குஞ்சரமடை வழியாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்