சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2024-04-28 11:54 GMT
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே பயணிகள் நிழற்குடை அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுகிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் அந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வந்து வாகனத்தை எடுக்கின்றனர். இதற்கிடையில் அந்த வழியாக சேலத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அப்போது ஒரு வாகனத்தோடு மற்றொரு வாகனம் முந்திக்கொண்டு செல்வதால் சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்