விபத்து அபாயம்

Update: 2024-04-21 11:14 GMT

கரூர் மாவட்டம் நொய்யல், கொடுமுடி, தாமரைபாளையம், முத்தூர், ஊஞ்சலூர், வெங்கம்பூர், நாயக்கனூர், ஆவுடையார்பாறை, தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, என்.புதூர், வாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். விளைந்த கரும்புகளை வெட்டி லாரிகள் மற்றும் இரட்டை டிப்பருடன் கூடிய டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இரட்டை டிப்பருடன் கூடிய டிராக்டரில் அதிகளவு கரும்பு பாரங்களை ஏற்றிச்செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்