நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2024-04-07 11:57 GMT

புதுக்கோட்டை நகரத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக திருச்சிக்கு அரசு மற்றும் தனியார், புறநகர் பஸ்கள் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக இயங்கி வருகின்றன. புதுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு அடுத்தப்படியாக உள்ள பஸ் நிறுத்தமாக சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் இருந்து வருகிறது. இங்கு தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கீரனூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு பஸ்களில் தான் செல்கின்றனர். ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் இந்த வழியாகச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுக்கோட்டையில் இருந்து சத்தியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்