பஸ் வசதி வேண்டும்

Update: 2024-03-31 17:27 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளி கிராமத்திற்கு காலையும், மாலையும் பஸ் இயக்கப்படுகிறது. மதியம் மட்டும் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர் சென்றால் வீடு திரும்ப மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஓசரப்பள்ளி கிராமத்திற்கு மதிய நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்