போக்குவரத்து நெரிசல்

Update: 2024-03-31 17:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர்- போச்சம்பள்ளி சாலையில் ஞாயிறு சந்தையின்போது சாலையோர வியாபாரிகள் அதிகளவில் கடைகள் அமைப்பது வழக்கம். போச்சம்பள்ளி- சந்தூர் செல்லும் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் இருசக்கர வாகனங்களை சாலையோரமே நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே ஞாயிற்றுகிழமைகளில் போச்சம்பள்ளி முதல் சந்தூர் வரை செல்லும் சாலையை போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாரந்தோறும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

-ஜோன்ஸ், போச்சம்பள்ளி.

மேலும் செய்திகள்