உத்தமபாளையம் பைபாஸ் சாலை, கிராம சாவடி பகுதியில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லாமல் நெரிசலில் சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.