போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-03-24 11:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள கைக்குறிச்சி மேட்டுப்பட்டி முதல் புதுக்கோட்டை வரை 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் காலை நேரங்களில் வெட்டப்பட்டு வருகின்றது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் அரசு பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மரங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்