போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-03-17 17:19 GMT

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி எல்லையையொட்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சுங்கச்சாவடி அருகில் சாலையின் இருபுறமும் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சுங்கச்சாவடி அருகில் லாரிகளை நிறுத்தாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர், குந்தாரப்பள்ளி.

மேலும் செய்திகள்