அனைத்து நாட்களும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-03-10 17:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து தொகரப்பள்ளி, மத்தூர், ஆந்திர மாநில எல்லையில் காளிகோவில், வரமலை குண்டா வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்சில் செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, பர்கூர்.

மேலும் செய்திகள்