புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 12:36 GMT

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த பணிகள் நிழற்குடையை ஆற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்