நிறுத்தப்பட்ட அரசு பஸ்

Update: 2024-03-10 11:37 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் சட்டமன்ற தொகுதியாக இருந்தபோது உப்பிலியபுரம் பணிமனையில் இருந்து கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, மல்லியகரை வழியாக சென்னைக்கு இரவு நேர பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து உப்பிலியபுரம், துறையூர் சட்டமன்ற தொகுதியாக மாறிய பிறகு அந்த பஸ் வசதி நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கெள்கிறோம். 

மேலும் செய்திகள்