பஸ் வசதி தேவை

Update: 2024-03-03 16:17 GMT

மதுரை மாவட்டம் ஆனையூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இருந்து மாட்டுத்தாவணி, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்