மாநகராட்சியின் மெத்தன போக்கு

Update: 2024-03-03 13:55 GMT

சென்னை அண்ணாசாலை, ஜி.பி. சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஏராளமாக கார்கள் சரி செய்யும் கடைகள் உள்ளது. அந்த பகுதியில் சாலையின் 2 பகுதிகளில் உள்ள நடைமேடையை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், நடுரோட்டில் வைத்து சில கார்கள் சரி செய்யப்படுவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஆம்புலன்சு, பள்ளி வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்