விபத்து அபாயம்

Update: 2024-03-03 11:45 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காக்காவாடி பகுதியில் 3 தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிக்கு வேலைக்கு செல்வோர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க இப்பகுதியில் இரும்பு தடுப்புகள், எச்சரிக்கை பலவைகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்