பயணிகள் கடும் அவதி

Update: 2024-03-03 11:45 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தாராபுரம் ரோட்டில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் பஸ்கள் வராததால் அரவக்குறிச்சியில் இருந்து வெளியூர் செல்ல வேண்டுமானால் நெடுந்தூரத்தில் உள்ள ஏ.வி.எம். ரவுண்டானா பகுதிக்குச் சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவலம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்