பஸ் வசதி தேவை

Update: 2024-03-03 10:05 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா அன்பின்நகரம் அடைக்கலாபுரம் பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் உடன்குடி, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு கருமேனியாறு வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது. எனவே அன்பின்நகரம் அடைக்கலாபுரத்துக்கு காலை, மாலையில் அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்