பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-02-25 15:08 GMT

கோபியில் இருந்து அந்தியூருக்கு தினமும் 5 முறை இயக்கப்பட்டு வந்த 20டி என்ற அரசு டவுன் பஸ் தற்போது 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள், பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே இவர்களின் நலன் கருதி மீண்டும் 20டி டவுன் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்