கட்டுமான பொருட்களை அகற்றலாமே

Update: 2024-02-18 17:15 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாலக்கோடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் பஸ் நிலையம் கட்ட பயன்படுத்தி மீதி இருந்த கட்டுமான தளவாட பொருட்கள் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராகுல், பாலக்கோடு.

மேலும் செய்திகள்