போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-18 10:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கேட் பகுதியில் அதிகமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் மட்டன், கோழி இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காகவும் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால் அறந்தாங்கி, ஆலங்குடியில் இருந்து வரும் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்