பயணிகள் அவதி

Update: 2024-02-18 09:40 GMT

நாகை மாவட்டத்தில் மஞ்சக்கொல்லை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் மூலம் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மஞ்சக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். பஸ் நிற்காமல் செல்வதால் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்