புதிய பஸ் நிலையம் வேண்டும்

Update: 2024-02-11 13:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புறங்கால் கூட்ரோடு பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல பஸ் ஏறுகின்றனர். ஆனால், அந்த பஸ் நிறுத்தம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பஸ் வரும் வரையில் சாலையில் அமர்ந்து இருந்து பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்