பாதசாரிகள் அவதி

Update: 2024-02-11 08:19 GMT

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையோரத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டள்ளது. ஆனால், இந்த நடைபாதையில் சிலர் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், சாலையில் இறங்கி செல்லவேண்டி உள்ளதால் சில நேரங்களில் வாகனங்கள் மோதி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்